நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 48 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

 

அவர்களில் 42 பேர் கடற்படையினர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய நால்வர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி இந்தியாலிருந்து நாடு திரும்பிய 3 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவரும் டுபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

 

இதனடிப்படையில் 947 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியிருந்த மேலும் 3 பேர் நேற்று தினம் குணமடைந்துள்ளனர்.

 

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளது.