நேற்று கொரோனாவினால் மரணித்த 6 பேரும் ஆண்கள்!

நேற்று கொரோனாவினால் மரணித்த 6 பேரும் ஆண்கள்!

நாட்டில் மேலும் 6 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 409 ஆக உயர்வடைந்துள்ளன.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த மாதம் 27 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வில ஓய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவருக்கு மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின்னர், அவர் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரிக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா, அவையங்கள் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பகுதியை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட பல்வேறு சிக்கலான நிலைமைகளே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

தீவிர கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட, பக்கவாதம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பகுதியை சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

குருதி விசமானமை, கொவிட்19 நிமோனியா, சீறுநீரக தொற்று என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும்.

நயினமடம பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா, தீவிர நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது