நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் மாயம்! திருமணம் செய்து கொண்டதாக தகவல்

நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் மாயம்! திருமணம் செய்து கொண்டதாக தகவல்

நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் ஒருவர் காணாமல் போன நிலையில் அவர் திருமணம் முடித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 23 வயதான குறித்த யுவதி வரகாபொல பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் திருமணம் செய்துகொள்ளும் நோக்குடன் இளைஞர் ஒருவருடன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை கட்டான ஹல்பே நகரில் உள்ள பீட்டர் சில்வா மாவத்தையிலிருந்து காணாமல் போன இளைஞர்கள்

வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும், குறித்த இளைஞர்கள் யுவதியின் திருமணத்தில் சாட்சியாக இருந்ததாகவும் அறியப்படுகிறது.

குறித்த இளைஞனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் முக்கிய உறவுகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் குறித்த திருமணத்தில் சம்பந்தப்பட்ட திருமண பதிவாளரை நீர்கொழும்பு காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.