வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!

கொவிட்-19 பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 13 விமான சேவைகளில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

நாடு திரும்பியவர்களில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 135 பேரும், கட்டாரில் 173 பேரும் அடங்குகின்றனர்.

நாடு திரும்பியவர்களில் 431 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக அங்கு சென்றவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.