
உருதிரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டில் நான்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பரவும் டீ.1.1.7 என்ற வீரியம்மிக்க உருதிரிபடைந்த புதிய கொரோனா வைரஸ், நாட்டில் நான்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு, வவுனியா, அவிசாவளை, பியகம முதலான பகுதிகளில் தொற்றுறுதியானவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உருதிரிபடைந்த புதிய கொரோனா வைரஸ், தற்போது வரை 50 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸால், நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பதை, குறித்த நாடுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
புதிய வைரஸ், உலகம் முழுவதும் புதிய கொரோனா அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.