நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு..!

நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு..!

நாட்டில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 370 ஆக உயர்வடைந்துள்ளன.

கபுலியத்த பகுதியை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலை, நிரையீரல் அழற்சி நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மொரட்டுவை பகுதியை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொத்தலாவலை பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியாவினால் , சிறு நீரகம் செயலிழந்தமை மற்றும் குருதி விசமானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடவளை பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் கொவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலைமை மற்றும மூச்சிழுப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 6 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா , மோசமடைந்த நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது