
இலங்கை முழுதும் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்காகவும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் நேற்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர்,
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ள பொலிஸ் நிர்வாகப் பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் தற்போதுதிறக்கப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை, மாவட்டங்களில் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும்
அதற்கிணங்கவே பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அது அனுமதிக்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த அனுமதி கிடைத்ததும் எதிர்வரும் 15ஆம் திகதி மேல் மாகாணத்தில் பெருமளவு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.