ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ள பாகிஸ்தான் பிரதமர்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ள பாகிஸ்தான் பிரதமர்!

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 24 ஆம் திகதி ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமர் இம்ரான் கான் ஸ்ரீலங்கா வரவுள்ளார்.

இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில், இம்ரான் கானின் நாடாளுமன்ற உரைக்கான ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 10ஆவது வெளிநாடு ஒன்றின் தலைவராக இம்ரான் கான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.