கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் மேலும் 912 பேர் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் கொவிட் நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65,053 ஆக அதிகரித்திருப்பதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது 4,817 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்