தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

தனிமைப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இறுதி 10 கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள், கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்களது நாளாந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை கோரியுள்ளது