கைவிடப்பட்ட வீடொன்றில் இரட்டைக் கொலை
கடந்த சனிக்கிழமை பூசாவிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து
32 வயதுடைய ஆண் ஒருவரதும் 75 வயதுடைய பெண் ஒருவரதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து பிரேதப் பரிசோதனை நடத்திய கராப்பிட்டி மருத்துவ பீடத்தின் தடயவியல் நிபுணர் யு.சி.சி பெரேரா, இரண்டு இறப்புகளும் கொலைகளால் நிகழ்ந்துள்ளதாக கூறினார்.
ரத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் விதான மற்றும் குழுவினர் இரட்டைக் கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.