
பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள மஹேல மற்றும் சங்கக்காரவின் செயற்பாடு
நான் அமைச்சராக இருந்தவேளை என்னுடன் இணைந்து செயற்பட மறுத்த மஹேல ஜெயவர்தன மற்றும் சங்கக்கார இருவரும் தற்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுகின்றமை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சராக இருந்தவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் இருவரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மறுத்தனர் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது இருவரும் கிரிக்கெட்டிலும் ஏனைய விளையாட்டுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் இது எனக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். நான் அவர்களின் பங்களிப்பை பெறுவது குறித்து உறுதியாக இருந்தேன். நான் அவர்களை எனது வீட்டில் சந்தித்தேன். அவர்கள் அந்த நேரத்தில் அதற்கு இணங்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்கம் பலவீனமான நிலையிலிருந்தது. அவர்கள் சர்ச்சையில் சிக்க விரும்பாமலிருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அமைப்புமுறை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்தார்கள் எனவும் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.