ஆடைத்தொழிற்சாலையொன்றில் கொரோனா தொற்றாளர்கள்! அதிகாரிகளின் செயலினால் பதற்றமடைந்த பணியாளர்கள்

ஆடைத்தொழிற்சாலையொன்றில் கொரோனா தொற்றாளர்கள்! அதிகாரிகளின் செயலினால் பதற்றமடைந்த பணியாளர்கள்

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டுள்ளது.

குறித்த தனியார் ஆடைதொழிற்சாலையில் பணியபற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்ற நிலையில் அவர்கள் தமது அச்சத்தினை தமது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.அர் பரிசோதனை முடிவுகள் நேற்றுமுந்தினம் சனிக்கிழமை வெளியாகிய நிலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடந்த அண்மைக் காலங்களில் பலர் அடையாளம் காணப்பட்டிருந்தர். குறித்த இரண்டு தொழிற்சாலைகளிலும் 300ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

கொரோனா தொ்றறு அடையாளம் காணப்பட்ட தொழிற்சாலையில் மட்டும் 1000பேர் வரையிலான ஊழியர்கள் பண்யாற்றுகின்றனர். இதில் குறைவான ஊழியர்கபளுக்கு மட்டுமே பி.சி.ஆர் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழிற்கசாலையில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலரும் தொழிலின் நிமித்தம் செல்கின்றனர்.

இதனால் மாவட்டத்தின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை பொது அமைப்புக்களால் மன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து உயர் பதவிநிலை ஊழியர்கள் வருகை தருவதால் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதற்கு அமைவாக சம்மந்தப்பட்டவர்களு்ம, சுகாதார துறையினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது.