வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

இதற்கமைய குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைப்பகுதிகளின் கிழக்கு சரிவுகளிலும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது