
வங்கிகளின் செயற்பாடு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் சில வங்கிகளில் இடம்பெற்று வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
எனவே வங்கிகளின் இந்த செயற்பாடு தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
சில வங்கிகள் எடுக்கும் தவறான முடிவுகளை தடுக்க எதிர்காலத்தில் சட்டங்கள் சிலவற்றை முன்மொழிய எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
´எவருக்கும் மற்றொருவரின் கணக்கில் இருந்து அவர்களுக்கு அறிவிக்காமல் ஒரு சதத்தினை கூட எடுக்க முடியாது. எனக்கு தெரியும் சில இடங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான விடயங்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும்.´ என்றார்