
நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 684 பேர் இன்று குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய,இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60,567 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66,409 ஆக காணப்படுகின்றது.
இவர்களில் 5,510 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக காணப்படுகின்றது.