நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.

கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 25,138 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 93 பேரும், கண்டி மாவட்டத்தில் 60 பேரும், காலி மாவட்டத்தில் 63 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலில் 74 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதவிர, களுத்துறையில் 34 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 15 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 10 பேரும் மாவட்ட ரீதியில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளனர்