கொரோனா வைரஸ் தொற்று : சர்வதேசத்தை விட இந்தியாவில் நல்ல நிலையில் இருப்பதாக மோடி கருத்து!

கொரோனா வைரஸ் தொற்று : சர்வதேசத்தை விட இந்தியாவில் நல்ல நிலையில் இருப்பதாக மோடி கருத்து!

சர்வதேச நாடுகளை விட கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற  நிகழ்வில்  காணொளி காட்சி வாயிலாக  பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ இந்த ஆண்டின் ஆரம்பத்தில்  கொரோனா தொற்று இந்தியாவில் மிகத் தீவிரமாக இருக்கும் என்று கணித்திருந்தனர்.

ஆனால் பொது முடக்கம்,  மத்திய அரசு  பொது மக்களின் ஒத்துழைப்போடு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக  கொரோனா  தொற்று பாதிப்பில் பல நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பான இடத்திலேயே உள்ளது. இந்தியாவில் குணமடைவோர் விகிதமும் உயர்ந்து வருகிறது.

 நாட்டில் பா.ஜ.க தலைமையிலான அரசின் திட்டங்களால் சுமார் 8 கோடி குடும்பங்கள் புகையில்லா சமையலறையைப் பெற்றுள்ளன. வீடில்லாத ஏழைஇ எளிய மக்களுக்கு இதுவரை சுமார் 1.5 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச் சிறந்த மருத்துவ திட்டமாக ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.