
நாட்டில் கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வு...!
நாட்டில் மேலும் ஒரு கொவிட்19 மரணம் நேற்று பதிவாகியது
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வடைந்துள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராகமை பகுதியை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவருக்கு வெலிசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா நிலை, குருதி விஷமானமை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.