விவசாயிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதல்...!

விவசாயிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதல்...!

புதுடில்லியில் செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள், போராட்டம் முன்னெடுத்துள்ளமையால், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதுடில்லி எல்லையில் விவசாயிகள் உழவு இயந்திர பேரணியை முன்னெடுத்துள்ள நிலையில், திடீரென ஒரு குழுவினர் நகருக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், செங்கோட்டை பகுதியில் பதற்ற நிலை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.