சிறுவனுக்கு எமனான ஊஞ்சல்! கதறும் பெற்றோர்

சிறுவனுக்கு எமனான ஊஞ்சல்! கதறும் பெற்றோர்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் தவறுதலாக ஊஞ்சல் சீலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் எட்டு வயதுச் சிறுவனே இவ்வாறு நேற்றையதினம் (23) உயிரிழந்துள்ளார்.

சிறுவன் சகோதரர்களுடன் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது நாளாந்தம் தான் ஏறி விளையாடும் சிறிய மாமரத்தில் தனது தாயின் சேலையினை எடுத்து அதனூடாக ஊஞ்சல் அமைத்து விளையாட முற்பட்ட போது குறித்த சேலையில் தவறுதலாக சிக்குண்டுள்ளார்.