
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 769 பேர்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 769 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,984 ஆக அதிகரித்துள்ளது.