தனிமைப்படுத்தலுக்கு உட்படும் மற்றும் விடுவிக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பான விபரங்கள்...!

தனிமைப்படுத்தலுக்கு உட்படும் மற்றும் விடுவிக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பான விபரங்கள்...!

மட்டக்களப்பு-அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவினை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை 6 மணி முதல் குறித்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார் .

அத்துடன், காத்தான்குடி கிராம சேவகப் பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் இன்று மாலை 6 மணி முதல் நீக்கப்பட உள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 165 காத்தான்குடி கிராமசேவக பிரிவு 03, 165A காத்தான்குடி கிராமசேவக பிரிவு மேற்கு, 165B காத்தான்குடி கிராமசேவக பிரிவு கிழக்கு, 166 காத்தான்குடி கிராமசேவக பிரிவு 02, 166A காத்தான்குடி கிராமசேவக பிரிவு வடக்கு, 167A காத்தான்குடி கிராமசேவக பிரிவு வடக்கு, 167B காத்தான்குடி கிராமசேவக பிரிவு கிழக்கு, 167D காத்தான்குடி கிராமசேவக பிரிவு மேற்கு போன்றவை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பண்டாரகம-அட்டுலுகம 660A எப்பிட்டமுள்ள கிராமசேவக பிரிவும் மற்றும் 659B பமுனுமுல்லை கிராமசேவக பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.