
களனி வனவாசல பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது...!
பேலியகொடை - களனி வனவாசல பகுதியில் 26 மில்லியன் ரூபா பணம் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து பணம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிக்கு மேலதிகமாக ஆயிரத்து 200 குதிரை வலு வேகம் கொண்ட பீ.எம்.டவ்ளியூவ் வர்க்க உந்துருளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த உந்துருளி பதிவு செய்யப்படாத நிலையில், போலியான இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
38 வயதுடைய சந்தேகநபர், குறித்த வாகனத்தை போதைப்பொருள் வர்த்தகத்திற்காக பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்