உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்-பிரதமர்

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்-பிரதமர்

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறுவதில் பலனில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் பாதணி தொழிற்சாலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையர்களான அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

இலங்கை அபிவிருத்தியடைந்த நாடு என்பதும் அனைவரினதும் கனவாகும்.

தற்போதைய கொவிட்19 பரவல் நெருக்கடி உலக நாடுகளை போன்று இலங்கை மக்களினது வாழ்வாதாரத்திலும் கடும் தாக்கத்தினை ஏற்பட்டுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் நலன் குறித்து செயற்படுவதே தமது தேவையாக உள்ளது.

எனவே உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்படும் இந்த பாதணி தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பாதணிகளை உள்ளுர் சந்தையில் 30 சதவீம் விலை குறைவாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.