விமான நிலையங்கள் மீள் திறப்பு-இலங்கை வந்த முதல் விமானம்
கொரோனா அச்சம் காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 07.40 அளவில் ஓமானில் இருந்து வணிக விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமான் விமான சேவைக்கு சொந்தமான ட்ப்ளியு.வை.371 ரக விமானமே இவ்வாறு நாட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டுள்ளது.