தென்கொரியாவில் சிக்கியிருந்த 245 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பினர்!

தென்கொரியாவில் சிக்கியிருந்த 245 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பினர்!

நாடு திரும்ப முடியாமல் தென்கொரியாவில் சிக்கியிருந்த 245 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று காலை அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தென்கொரியா விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இலங்கை வந்த அவர்கள், விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.