கொரோனா நோயாளிகளுக்கு தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை

கொரோனா நோயாளிகளுக்கு தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை

கொழும்பில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் தனியார் மருத்துவமனைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.