அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்: 19-1-1903

அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள்: 19-1-1903

ஐக்கிய அமெரிக்கா- இங்கிலாந்துக்கு இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாளாகும். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது.

 

ஐக்கிய அமெரிக்கா- இங்கிலாந்துக்கு இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாளாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது. * 1829 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவின் பவுஸ்ட் பகுதி 1 பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது. * 1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனி ஏமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது. * 1853 – ஜூசெப்பே வேர்டியின் ஆப்பெரா இல் ட்ரவடோர் ரோமில் பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது. * 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜார்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.

* 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை பெற்றது. * 1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது. * 1917 – லண்டனில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர். * 1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேறுவதிற்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியது. * 1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது. * 1937 – ஹோவார்ட் ஹியூஸ் லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூயார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார். * 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர். * 1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர். * 1949 – கூபா இசுரேலை கண்டுகொண்டது.

* 1966 – இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். * 1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். * 1983 – நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான். * 1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது. * 1993 - வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது. * 1993 - ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.

* 1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார். * 2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது. * 2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.