காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்றுறுதி...!

காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்றுறுதி...!

மாத்தறை கம்புறுபிட்டிய காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த காவல் நிலையத்தில் பணி புரிந்த 34 காவல்துறை அதிகாரிகளை தனிமைப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கு நாளை பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், காவல் நிலையத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.