மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பிலான முடிவு இரு வாரங்களில்...!

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பிலான முடிவு இரு வாரங்களில்...!

மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய சூழல் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.