எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896

எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள்: 18-1-1896

மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர். வில்லெம் இராண்ட்ஜன் என்பவர் 1985-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊர்சுபெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அருகில்

 

மனித உடலை ஊடுருவிப் பார்க்கவும், பெட்டியை திறக்காமலேயே சோதனையிடவும் உதவுகிற எக்ஸ்ரே கருவியை 1896-ஆம் ஆண்டு இதே தேதியில் முதற்தடவையாக காட்சிப்படுத்தினர்.

வில்லெம் இராண்ட்ஜன் என்பவர் 1985-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊர்சுபெர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சயனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதை கண்டார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும், இல்லாதபோது ஒளிராமலும் இருப்பதை கண்டார். இதற்கு குழாய்களின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் என கருதினார். இக்கதிர்களை அவர் எக்ஸ் கதிர்கள் என அழைத்தார்.

 


இக்கதிர்கள் மிக அதிக ஆற்றல் வாய்ந்தவை. இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இக்கதிர்கள் காந்த மின்புலங்களால் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் அது பயன்பாட்டுக்கு வந்தது. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.