போலியான முறையில் அழைப்பினை ஏற்படுத்தி விசாரணைகளுக்கு தடையேற்படுத்துவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை!

போலியான முறையில் அழைப்பினை ஏற்படுத்தி விசாரணைகளுக்கு தடையேற்படுத்துவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை!

தமது உறவினர் அல்லது நண்பர் எனக் கூறி போலியான வகையில் அழைப்பினை ஏற்படுத்தி விசாரணைகளுக்கு தடையேற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையொன்று சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறான அழுத்தங்கள் காரணமாக இடைநிறுத்தாது, எவ்வித பாரபட்சமும் இன்றி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து செல்லுமாறு அந்த சுற்றறிக்கையின் ஊடாக சகல காவல்நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.