
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் நன்மையடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்புநிலை அடைவதிலிருந்து நன்மையடைந்து, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்த சுட்டெண்ணானது கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்தும் அதிகரித்து மாதாந்த அடிப்படையில் 61 தசம் 2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது.
இதற்கு உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் என்பன முக்கிய காரணமாக அமைந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.