ஐந்து வயது சிறுமியை வன்புணர்விற்குட்படுத்திய நபர் கைது!

ஐந்து வயது சிறுமியை வன்புணர்விற்குட்படுத்திய நபர் கைது!

ஐந்து வயது சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற முறையில் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது மனைவியை விட்டுப் பிாிந்தவரென்பதோடு வன்புணர்விற்கு உட்படுத்திய சிறுமியின் தந்தைக்குச் சொந்தமான தோட்டமொன்றில் நீண்டகாலமாக பணிபுாிந்து வருபவரென்பதும் தொிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி இறக்வானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுாி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமற்ற வேளையில் குறித்த சிறுமியை ஏமாற்றி அருகிலுள்ள புதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தொிய வந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்வானை காவல் துறையினர் மேற்கொள்ளவுள்ளனர்.