இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போட்டியிலிருந்து விலகல்...!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போட்டியிலிருந்து விலகல்...!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.

உபாதை காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக உபாதை காரணமாக இசாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் போட்டியிரலிருந்து விலகினர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.