வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியாவில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அவர்களது முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் 25 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.