
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்...!
கொழும்பு மாவட்டத்தில், கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை முதலான காவல்துறை அதிகார பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், கோத்தமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரளை - கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின், வத்தளை காவல்துறை அதிகார பிரிவின், வெலிக்கடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவ வத்த, கிரிபத்கொடை காவல்துறை அதிகார பிரிவின் ஹுணுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த மற்றும் நீர்கொழும்பு காவல்துறை அதிகாரி பிரிவின் தல்துவ கிராம சேவகர் பிரிவின் எம்.சி வீடமைப்பு யோசனைத் திட்டம் என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அந்த நடைமுறை அவ்வாறே தொடரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.