மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் வர்த்தக நிலையங்கள் மூடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் வர்த்தக நிலையங்கள் மூடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதிவரை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகை வாரத்தை முன்னிட்டு, சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 25 பாடசாலைகள் தவிர்ந்த, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய சகல பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.