
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை...!
நாட்டின் சில பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றர் வரையில் பதிவாகக்கூடுமென எதிர்வு கூறி, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றம் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் ஊடாக நாட்டின் சில பகுதிகளில் இடைஇடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.