கால்நடைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் தொற்று..!

கால்நடைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் தொற்று..!

நாடளாவிய ரீதியில் பரவலடையும் கெப்ரி பொக்ஸ் எனப்படும் வைரஸ் வகையை சேர்ந்த கால்நடைகளுக்கு பரவும் ஒருவித நோய் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தற்போது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வைரஸானது நாட்டின் 14 மாவட்டங்களுக்கு பரவலடைந்துள்ளதாக கால்நடை வளங்கள்,பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கால்நடைகளுக்கு பரவும் புதிய வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்கு கால்நடை வளங்கள்,பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வைரஸ் தொற்று காரணாமாக பொலன்றுவை உள்ளிட்ட பகுதிகளின் பால் உற்பத்தியாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது