அறைகளில் இருந்து வெளியே வாருங்கள் -அமைச்சர்களுக்கு கோட்டாபய உத்தரவு
கொரோனா பிரச்சினையை காரணங்காட்டி மூடிய அறைக்குள் இருந்து கொண்டிருப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனால் அறைகளிலிருந்து வெளியே வந்து கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சர்களை முயற்சிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கிராமத்துடன் பேச்சு என்ற வேலைத்திட்டம் குறித்து அலரிமாளிகையில் இன்று நடந்த முக்கிய கலந்துரையாடலில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.