சிறைச்சாலைக்குள் போதை பொருட்களை எடுத்துச்செல்ல முயற்சித்தவர் கைது..!

சிறைச்சாலைக்குள் போதை பொருட்களை எடுத்துச்செல்ல முயற்சித்தவர் கைது..!

தும்பறை சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்களை சூட்சமமாக மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போது குறித்த சிறைச்சாலை அதிகாரி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்