இராணுவ சோதனை சாவடிக்குள் திடீரென புகுந்த கழிவு பவுஸர்!

இராணுவ சோதனை சாவடிக்குள் திடீரென புகுந்த கழிவு பவுஸர்!

மன்னார் பிரதான வீதியின் பாலத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது மன்னார் நகரசபைக்கு சொந்தமான கழிவு பவுஸர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தெரிய வருகையில்,

மன்னார் நகரசபைக்கு சொந்தமான கழிவு பவுஸரானது கழிவுகளை சேகரித்துக் கொண்டு பாப்பாமோட்டை பகுதியில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் பாலத்திற்கு அருகில் உள்ள பிரதான சோதனை சாவடியில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மோதியதால் விபத்து .

குறித்த வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது சோதனை சாவடிக்காக அமைக்கப்பட்ட தடைகள் தூக்கி வீசப்பட்டதுடன், வாகனங்கள் பதிவு செய்யப்படும் பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.