பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

கொரோனா ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் வௌியிட்ட ஆலோசனைகள் சில நிறுவனங்களில் அமுல்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அனைத்து நிறுவனங்களிலும் கொரோனா ஒழிப்பு சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.