விமான நிலையங்களை திறக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்காகவும் வர்த்தக விமானங்களுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க உட்பட விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தி, சுகாதார பிரிவினர் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நிமல் லங்சா, ஜனவரி 22 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வரும் அனைத்து வர்த்தக விமானங்களுக்கு நாட்டுக்குள் வர சந்தர்ப்பம் வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். பாதுகாப்பு முறைகளை கையாண்டு நாட்டை திறக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.