ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரரின் சமூக வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரரின் சமூக வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர் தனஞ்செய டி சில்வாவின் சமூக வலைத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது இன்ஸ்ரகிராம் கணக்கின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனஞ்ஜிய டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்..

தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

தனது கணக்கின் ஊடாக இடையூறுகள் ஏற்பட்டிருப்பின், மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்