சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை இன்றைய தினம் வரை 4 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 123 பேர் சிறைச்சாலை அதிகாரிகள். 460 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டனை விதிக்கப்பட்ட ஆண் கைதிகள். 9 பேர் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிகள்.

தண்டனை விதிக்கப்படாது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 317 ஆண் கைதிகள் மற்றும் 194 பெண் கைதிகள் கொரோனா தொற்றாளர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 119 அதிகாரிகள் மற்றும் 3 ஆயிரத்து 244 கைதிகள் குணமடைந்துள்ளனர். மேலும் 4 அதிகாரிகள் மற்றும் 727 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.