பாரிய வெடி விபத்து! இந்திய பிரஜை பலி

பாரிய வெடி விபத்து! இந்திய பிரஜை பலி

கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதை தெரிவிக்கின்றார்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொட்டதெனியாவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றின் கொதிகலனொன்று வெடித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்