தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 23 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 23 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,900 பேருக்கு எதிராக தற்போது வரை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,044 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.